Adiguru – Jiva Tattvam
Pages: 1 2
Pages: 1 2
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
ஐம்பூதங்கள் – ஆகாயம்
ஐந்துவகை யாகின்ற பூதவகை யாவதிலே
ஆகாய வெளி யானதே
ஆரம்ப மாகின்ற மூலப் பிரகிருதியின்
அச்சார மான வித்து
விந்துவடி வானதென வேறுவடி வாயுலகில்
விளைகின்ற சக்தி எல்லாம்
வேறானதும் அண்ட வெளியானதும் சிவன்
வேதவடி வான நிலையே
ஜந்துஜன தாவர சகலபொருட் காவுயிர்
ஜகத்திலே விரித்த போர்வை
சக்தியே சிவஞான சித்தியே ஞானகுரு
சங்கரா உனது பார்வை
சிந்தையா காயமென் சீவனுன் உபாயமெனும்
சிவஞான யோகம் அருள்வாய்
சின்மயா நந்தனே உண்மையா தென்முகச்
சீர்வடிவே ஞான குருவே
(1)
ஆகாய வெளி யானதே
ஆரம்ப மாகின்ற மூலப் பிரகிருதியின்
அச்சார மான வித்து
விந்துவடி வானதென வேறுவடி வாயுலகில்
விளைகின்ற சக்தி எல்லாம்
வேறானதும் அண்ட வெளியானதும் சிவன்
வேதவடி வான நிலையே
ஜந்துஜன தாவர சகலபொருட் காவுயிர்
ஜகத்திலே விரித்த போர்வை
சக்தியே சிவஞான சித்தியே ஞானகுரு
சங்கரா உனது பார்வை
சிந்தையா காயமென் சீவனுன் உபாயமெனும்
சிவஞான யோகம் அருள்வாய்
சின்மயா நந்தனே உண்மையா தென்முகச்
சீர்வடிவே ஞான குருவே
(1)
ஐம்பூதங்கள் – காற்று
வேற்றுவி காரமும் வெளியுப காரமும்
விரிக்கப் பரவி யாளும்
விண்ணோ டுலவிடும் தண்ணோ டுலகிடும்
விரிவா கனமு மாகும்
மாற்றுவ தாவன மழையொடு வெயிலென
மாறுதல் சுமந்தி ருக்கும்
மருவிடும் மூச்சிலும் கருவிலும் பேச்சிலும்
மந்திரத் துணை இருக்கும்
காற்றெனுந் தத்துவத் தோற்றமுங் காட்டினை
காலபரி மாணம் விட்டுக்
கல்லால மரத்தமர் வல்லாளனே குரு
கைவல்ய ஞான வடிவே
தேற்றுவ தாமிலகு காற்றான மென்மையே
திருவருட் பேருண் மையே
தென்னவனே ஞானகுரு மன்னவனே சிவஞான
திருவடிவே அருளபயந் தா!
(2)
விரிக்கப் பரவி யாளும்
விண்ணோ டுலவிடும் தண்ணோ டுலகிடும்
விரிவா கனமு மாகும்
மாற்றுவ தாவன மழையொடு வெயிலென
மாறுதல் சுமந்தி ருக்கும்
மருவிடும் மூச்சிலும் கருவிலும் பேச்சிலும்
மந்திரத் துணை இருக்கும்
காற்றெனுந் தத்துவத் தோற்றமுங் காட்டினை
காலபரி மாணம் விட்டுக்
கல்லால மரத்தமர் வல்லாளனே குரு
கைவல்ய ஞான வடிவே
தேற்றுவ தாமிலகு காற்றான மென்மையே
திருவருட் பேருண் மையே
தென்னவனே ஞானகுரு மன்னவனே சிவஞான
திருவடிவே அருளபயந் தா!
(2)
தீ
விடியவரும் உதயமெனும் விரிவினிலே அருளவரும்
விரியுங்கதி ரொளியின் வடிவும்
விளையவரும் பயிரில்முளை வித்தினுரு சத்தின்நிலை
விடையவரும் வெப்ப வடிவும்
மடியவரும் மறையுமதி முடிமுதலும் தினகரனும்
மண்ணிலகு மின்னணு விலும்
மலரவரும் நெருப்பினரு வுருவம்பல கருவுடனும்
மயங்கிவரு வழக்கம றியும்
படியவரும் அருளுமடி பயிலவருங் குருவடிவும்
பரவியருள் சிவனுரு வமும்
பார்க்கறிய ஜோதிமயம் பார்த்தறிய ஞானவரம்
பக்திதரும் சக்தி யருளும்
முடியவரும் நல்லறிவும் முனையவரும்
முக்திதரும் மோனவடி வான குருவே
முன்னவனே ஞானமழைத் தென்னவனே மோனநிலை
முற்றுங் கடந்த முதலே!
(3)
விரியுங்கதி ரொளியின் வடிவும்
விளையவரும் பயிரில்முளை வித்தினுரு சத்தின்நிலை
விடையவரும் வெப்ப வடிவும்
மடியவரும் மறையுமதி முடிமுதலும் தினகரனும்
மண்ணிலகு மின்னணு விலும்
மலரவரும் நெருப்பினரு வுருவம்பல கருவுடனும்
மயங்கிவரு வழக்கம றியும்
படியவரும் அருளுமடி பயிலவருங் குருவடிவும்
பரவியருள் சிவனுரு வமும்
பார்க்கறிய ஜோதிமயம் பார்த்தறிய ஞானவரம்
பக்திதரும் சக்தி யருளும்
முடியவரும் நல்லறிவும் முனையவரும்
முக்திதரும் மோனவடி வான குருவே
முன்னவனே ஞானமழைத் தென்னவனே மோனநிலை
முற்றுங் கடந்த முதலே!
(3)
நீர்
வாருலகப் பேருயிர்கள் வாழவே வளியொடு
வந்துறையும் தீயின் அருளால்
வளியாகக் கார்முகில் வழியாகக் கடலாக
வழிந்தோடும் நதிவடிவ தால்
பாருலகப் பலனடைய நீருரவ நலனாகப்
படைத்தருளும் பேரமிர் தமாய்
பாதாதி கேசமுமு நீராதி யானதுடற்
பாத்திரம் படைத்த நிலையால்
சாருமதி யாளருடல் சரிஈரம் என்பதாய்
சத்தியம் நீரின் நிலையே
சங்கரா சிவகங்கை மங்களா சுயம்புவே
சக்திவடி வான கலையே
போருலக ஆசைமதி நீரிளக வைத்தெனை
புதுப்பித்து அருள வேண்டும்
புத்தனே சிவஞான சித்தனே மோனவழி
போதிக்கும் ஞான குருவே
(4)
வந்துறையும் தீயின் அருளால்
வளியாகக் கார்முகில் வழியாகக் கடலாக
வழிந்தோடும் நதிவடிவ தால்
பாருலகப் பலனடைய நீருரவ நலனாகப்
படைத்தருளும் பேரமிர் தமாய்
பாதாதி கேசமுமு நீராதி யானதுடற்
பாத்திரம் படைத்த நிலையால்
சாருமதி யாளருடல் சரிஈரம் என்பதாய்
சத்தியம் நீரின் நிலையே
சங்கரா சிவகங்கை மங்களா சுயம்புவே
சக்திவடி வான கலையே
போருலக ஆசைமதி நீரிளக வைத்தெனை
புதுப்பித்து அருள வேண்டும்
புத்தனே சிவஞான சித்தனே மோனவழி
போதிக்கும் ஞான குருவே
(4)
மண்
மண்ணுலகு என்பதொரு மாயாவி நோதமே
மாபூத மைந்தின் மையம்
மருவிடும் உயிர்க்கெலா முருவமுஞ் சமைத்திடும்
மண்பாண்ட மென்ப தையம்
எண்ணளவு மில்லையிது ஏற்புடைய தாகவுயிர்
எழுச்சிக்கு வைத்த டு
எண்புறமும் விண்வெளியில் கண்பரவும் வரையிலே
ஏதொன்று மில்லை ஈடு
உண்ணுவது முடுப்பதும் ஓடியே உழைப்பதும்
உயர்வதும் அயர்வ தான
உலகியல் யாவுமே நிலவிடப் பொறுமையாய்
உதவிக்கு வைத்த வையம்
பண்ணுதற் கரியனே பரமனே கருணையால்
படைத்துக் கிடைத்த காயம்
பாவித்து நானுலகைச் சேவிக்க வேண்டினேன்
பரசிவனே ஞான குருவே
(5)
மாபூத மைந்தின் மையம்
மருவிடும் உயிர்க்கெலா முருவமுஞ் சமைத்திடும்
மண்பாண்ட மென்ப தையம்
எண்ணளவு மில்லையிது ஏற்புடைய தாகவுயிர்
எழுச்சிக்கு வைத்த டு
எண்புறமும் விண்வெளியில் கண்பரவும் வரையிலே
ஏதொன்று மில்லை ஈடு
உண்ணுவது முடுப்பதும் ஓடியே உழைப்பதும்
உயர்வதும் அயர்வ தான
உலகியல் யாவுமே நிலவிடப் பொறுமையாய்
உதவிக்கு வைத்த வையம்
பண்ணுதற் கரியனே பரமனே கருணையால்
படைத்துக் கிடைத்த காயம்
பாவித்து நானுலகைச் சேவிக்க வேண்டினேன்
பரசிவனே ஞான குருவே
(5)
கர்மேந்திரியம் – கை
கைஎன்ப தோர்கரும யந்திரம் தினசரி
காரிய மாற்றும் கருவி
கரங்களே வருங்கால வரங்களே தருவது
கறைபடி யாது கருதி
செய்வதே கையிதால் செய்கை என்றானது
செல்வம் ஈட்டி உதவி
சேருவர் இடத்திலே சேர்த்துக் கொடுத்திடும்
சிறப்பினால் சிவக்கும் உறுதி
மெய்வழி காட்டவும் மெலியர்துணை கூட்டவும்
மேலோர் முன்கூப்ப வும்
மெதுவாய் இணையவும் இதமாய் உதவவும்
மென்கவிதை நன்கெழு தவும்
ஐங்கர னய்யனே ஆதிகுரு சங்கரா
ஆதரித் தருள வேண்டும்
அழகுவிழி மலரனைய நிலவுநகை முகமினிய
ஆதிகுரு வான கலையே!
(6)
காரிய மாற்றும் கருவி
கரங்களே வருங்கால வரங்களே தருவது
கறைபடி யாது கருதி
செய்வதே கையிதால் செய்கை என்றானது
செல்வம் ஈட்டி உதவி
சேருவர் இடத்திலே சேர்த்துக் கொடுத்திடும்
சிறப்பினால் சிவக்கும் உறுதி
மெய்வழி காட்டவும் மெலியர்துணை கூட்டவும்
மேலோர் முன்கூப்ப வும்
மெதுவாய் இணையவும் இதமாய் உதவவும்
மென்கவிதை நன்கெழு தவும்
ஐங்கர னய்யனே ஆதிகுரு சங்கரா
ஆதரித் தருள வேண்டும்
அழகுவிழி மலரனைய நிலவுநகை முகமினிய
ஆதிகுரு வான கலையே!
(6)
கர்மேந்திரியம் – கால்
ஒருகாலும் சிவநாமம் மறவாத நிலைவேண்டும்
உத்தமர்தம் உறவு வேண்டும்
ஓதறிய ஞானமறை வேதியரின் தவத்திலே
உலகிலே நடக்க வேண்டும்
வருகாலம் வளமாகும் வல்லவரும் நல்லவராய்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
வையத்தில் நல்லோர்க்கு வழிகாட்டி யாமென்ற
வகையிலே நடக்க வேண்டும்
மறுகாலும் செவியூட நடமாடும் சிற்சபை
மன்னவா மதிசூட வா
மந்திரப் புன்னகையில் மவுனச் சந்நிதியில்
மாயவனே பூர்வ பலனால்
இருகாலும் பற்றினேன் இடரேதும் வாராமல்
இன்னருள் கூட்ட வேண்டும்
ஈசனே இமயகிரி வாசனே ஆலமரும்
இறையவனே ஞான குருவே
(7)
உத்தமர்தம் உறவு வேண்டும்
ஓதறிய ஞானமறை வேதியரின் தவத்திலே
உலகிலே நடக்க வேண்டும்
வருகாலம் வளமாகும் வல்லவரும் நல்லவராய்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
வையத்தில் நல்லோர்க்கு வழிகாட்டி யாமென்ற
வகையிலே நடக்க வேண்டும்
மறுகாலும் செவியூட நடமாடும் சிற்சபை
மன்னவா மதிசூட வா
மந்திரப் புன்னகையில் மவுனச் சந்நிதியில்
மாயவனே பூர்வ பலனால்
இருகாலும் பற்றினேன் இடரேதும் வாராமல்
இன்னருள் கூட்ட வேண்டும்
ஈசனே இமயகிரி வாசனே ஆலமரும்
இறையவனே ஞான குருவே
(7)
கர்மேந்திரியம் – வாய்
நாச்சுவை மொழியிலே நச்சினம் மறையவே
நல்லதே பேச வேண்டும்
நாகாத்து நேரத்தில் நலமான வார்த்தைகள்
நாவிலே வீச வேண்டும்
மூச்சான சத்தியம் முகரவேண்டும் மனம்
முளைப்பதே மொழிய வேண்டும்
முன்னே ஓர்சொலும் பின்னே கோள்சொலும்
முறைகேடு ஒழிய வேண்டும்
வீச்சான சுடுசொலை விடவேண்டும் திருவருள்
வேதம் உரைக்க வேண்டும்
வில்லான நாவில்சுடு சொல்லான அம்புகள்
விடுதலை மறைக்க வேண்டும்
பேச்சான கருவியே பெரியவா னத்திடை
பிரதியாக வைத்த தேவே
பெருமானே தென்நோக்கில் உருவான குருஞானி
பேரழகே மோன வடிவே!
(8)
நல்லதே பேச வேண்டும்
நாகாத்து நேரத்தில் நலமான வார்த்தைகள்
நாவிலே வீச வேண்டும்
மூச்சான சத்தியம் முகரவேண்டும் மனம்
முளைப்பதே மொழிய வேண்டும்
முன்னே ஓர்சொலும் பின்னே கோள்சொலும்
முறைகேடு ஒழிய வேண்டும்
வீச்சான சுடுசொலை விடவேண்டும் திருவருள்
வேதம் உரைக்க வேண்டும்
வில்லான நாவில்சுடு சொல்லான அம்புகள்
விடுதலை மறைக்க வேண்டும்
பேச்சான கருவியே பெரியவா னத்திடை
பிரதியாக வைத்த தேவே
பெருமானே தென்நோக்கில் உருவான குருஞானி
பேரழகே மோன வடிவே!
(8)
கர்மேந்திரியம் – இனக்குறி
விதவிதமாய் உருவம் விளைபயிரும் மிருகம்
விண்பறவை மண்பிறக்க லாகும்
வித்தெனவே சத்துணர்வு தத்திணைய லாகும்
விந்தெனவே தந்தவர மாகும்
சதிபதியாய்த் தம்பதியாய் சந்ததியாய் வாழும்
சத்தியமே ஜீவனுரு வாகும்
சாருமதி நீருறையச் சேருமிட மாகும்
சரிகிரியா சக்தியது வாகும்
புதுநிதியே புண்ணியனே பூவுலகங் காக்க
புத்திரனைப் பூமகளைத் தருக
பூத்தமலர் தேத்தமிழை நாத்தளரக் கூட்ட
புன்னகையே மன்னவனே காட்ட
பதிமதியே சிரம்வதியும் பசுபதியே ஹரனே
பரசிவனே தென்முகனே வருக
கதியினியே நினதுமலர்க் காலடியே தேவே
கல்லால் அமர்ந்தெனக்கு அருள்க!
(9)
விண்பறவை மண்பிறக்க லாகும்
வித்தெனவே சத்துணர்வு தத்திணைய லாகும்
விந்தெனவே தந்தவர மாகும்
சதிபதியாய்த் தம்பதியாய் சந்ததியாய் வாழும்
சத்தியமே ஜீவனுரு வாகும்
சாருமதி நீருறையச் சேருமிட மாகும்
சரிகிரியா சக்தியது வாகும்
புதுநிதியே புண்ணியனே பூவுலகங் காக்க
புத்திரனைப் பூமகளைத் தருக
பூத்தமலர் தேத்தமிழை நாத்தளரக் கூட்ட
புன்னகையே மன்னவனே காட்ட
பதிமதியே சிரம்வதியும் பசுபதியே ஹரனே
பரசிவனே தென்முகனே வருக
கதியினியே நினதுமலர்க் காலடியே தேவே
கல்லால் அமர்ந்தெனக்கு அருள்க!
(9)
கர்மேந்திரியம் – கழிவாசல்
உண்டதும் உணவிலே ஒதுங்கிடும் எச்சத்தை
ஓயாமல் பிரித் தெடுக்கும்
ஓடிடும் உதிரத்தில் ஒதுங்கிடும் மிச்சத்தை
உப்பெனத் தடுத் திணைக்கும்
பண்டமும் பழுதறப் பார்த்திடும் வேர்த்திடும்
படைத்துடற் கழிவா சலைப்
பாவித்து நாமுலகில் சேவித்துக் கற்றிடும்
பாடத்தில் அறியும் உண்மை
கண்டதும் கேட்டதும் கைகொள்வ தெதிலும்
கசடறக் கற்க வேண்டும்
கடைவாசல் தேறாத அடையாளங் காண்கையில்
கழித்தவை ஒதுக்க வேண்டும்
தண்டமுன் னடைக்கலம் தட்சிணா மூர்த்தியே
தாயனே விலக்கும் ஞானம்
தரவேண்டும் நந்நிலை வரவேண்டும் சந்நிதி
தத்துவ முத்தி முதலே
(10)
ஓயாமல் பிரித் தெடுக்கும்
ஓடிடும் உதிரத்தில் ஒதுங்கிடும் மிச்சத்தை
உப்பெனத் தடுத் திணைக்கும்
பண்டமும் பழுதறப் பார்த்திடும் வேர்த்திடும்
படைத்துடற் கழிவா சலைப்
பாவித்து நாமுலகில் சேவித்துக் கற்றிடும்
பாடத்தில் அறியும் உண்மை
கண்டதும் கேட்டதும் கைகொள்வ தெதிலும்
கசடறக் கற்க வேண்டும்
கடைவாசல் தேறாத அடையாளங் காண்கையில்
கழித்தவை ஒதுக்க வேண்டும்
தண்டமுன் னடைக்கலம் தட்சிணா மூர்த்தியே
தாயனே விலக்கும் ஞானம்
தரவேண்டும் நந்நிலை வரவேண்டும் சந்நிதி
தத்துவ முத்தி முதலே
(10)
ஞானேந்திரியம் – கண்
கண்ணே கலையறிவு காணுமதி காரிவிழி
காணப் பிறக்கும் அறிவும்
காருண்ய தானதறி சூர்யப்ர காசமும்
காட்சிக் களித்து உதவும்
மண்ணே ழுலகமும் மகிழவும் மற்றவரை
மதித்துப் பழகும் நிலையும்
மாறாத செழுமையும் மறையாத ஆனந்தம்
மகிழ்ந்தாடும் நன்மக்க ளும்
முன்னே தெரியவும் முக்காலம் அறியவும்
மூடித் திறக்கும் இமையுள்
முதலான சிவநாதன் நடமாடும் தரிசனம்
முற்றும் தெரிய வேண்டும்
தண்ணே யணிபித் தாமறை நாயகா
தாரகா நீயறிய வா
தருமனே குருபரா தயைபுரி சங்கரா
தட்சிணா மூர்த்தி குருவே
(11)
காணப் பிறக்கும் அறிவும்
காருண்ய தானதறி சூர்யப்ர காசமும்
காட்சிக் களித்து உதவும்
மண்ணே ழுலகமும் மகிழவும் மற்றவரை
மதித்துப் பழகும் நிலையும்
மாறாத செழுமையும் மறையாத ஆனந்தம்
மகிழ்ந்தாடும் நன்மக்க ளும்
முன்னே தெரியவும் முக்காலம் அறியவும்
மூடித் திறக்கும் இமையுள்
முதலான சிவநாதன் நடமாடும் தரிசனம்
முற்றும் தெரிய வேண்டும்
தண்ணே யணிபித் தாமறை நாயகா
தாரகா நீயறிய வா
தருமனே குருபரா தயைபுரி சங்கரா
தட்சிணா மூர்த்தி குருவே
(11)
ஞானேந்திரியம் – செவி
ஒலிக்கு ஆதாரம் ஓங்காரமே மிசை
ஓசைமின் னனுவில் விரியும்
ஓயாத சத்தத்தில் ஒருமித்த மோனத்தை
உணரத் தெரியும் அறியும்
விழிக்கு எட்டாது விரியும்ஏ காந்தமே
வேதவடி நாதம் இதமாய்
விளங்கும் சிவமயந் துலங்கும் உணர்வினை
விரையப் புகட்டும் செவியே
மொழிக்கு உதவட்டும் முக்காலம் உணரட்டும்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்
முரண்பாடு காணாது தரமான சத்தியம்
முற்றும் கேட்க வேண்டும்
வழிக்கு வல்லவனே வாய்பேசா நல்லவனே
வரமிந்தக் கரமீது தா
வரசிவனே தென்னகத்துப் பரசிவனே ஆதியே
வடிவழகே ஞான குருவே
ஓசைமின் னனுவில் விரியும்
ஓயாத சத்தத்தில் ஒருமித்த மோனத்தை
உணரத் தெரியும் அறியும்
விழிக்கு எட்டாது விரியும்ஏ காந்தமே
வேதவடி நாதம் இதமாய்
விளங்கும் சிவமயந் துலங்கும் உணர்வினை
விரையப் புகட்டும் செவியே
மொழிக்கு உதவட்டும் முக்காலம் உணரட்டும்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்
முரண்பாடு காணாது தரமான சத்தியம்
முற்றும் கேட்க வேண்டும்
வழிக்கு வல்லவனே வாய்பேசா நல்லவனே
வரமிந்தக் கரமீது தா
வரசிவனே தென்னகத்துப் பரசிவனே ஆதியே
வடிவழகே ஞான குருவே
ஞானேந்திரியம் – நாக்கு
பக்குவ மறியவும் பற்சுவை புரியவும்
பல்லிடை அடங்கி ஆளும்
பாம்பனைய நாவிலுரு வாகுமுமிழ் நீரெனும்
பசியமுது வசியமுற நான்
சற்குண வாளனே சங்கரா சுயம்புவே
சனகாதி முனிவ ராதி
சாரணரும் ஓங்காரக் காரணம் அறியவே
சாட்சியமர் வான தெற்கு
திக்குற நின்றநிலை நெக்கு நெக்குருகி
திருவடியில் தினமடிய நான்
தேடுவது அடையவே நாடுவது அறியவே
தேவரிணை யாக உலகில்
நற்குண மடைந்துபரி பக்குவ நிலைகடந்து
நாவமுது கூட வைப்பாய்
நாதவடி வேபரம மோனவடி வானசிவ
நாகமணி யோக நிலையே
பல்லிடை அடங்கி ஆளும்
பாம்பனைய நாவிலுரு வாகுமுமிழ் நீரெனும்
பசியமுது வசியமுற நான்
சற்குண வாளனே சங்கரா சுயம்புவே
சனகாதி முனிவ ராதி
சாரணரும் ஓங்காரக் காரணம் அறியவே
சாட்சியமர் வான தெற்கு
திக்குற நின்றநிலை நெக்கு நெக்குருகி
திருவடியில் தினமடிய நான்
தேடுவது அடையவே நாடுவது அறியவே
தேவரிணை யாக உலகில்
நற்குண மடைந்துபரி பக்குவ நிலைகடந்து
நாவமுது கூட வைப்பாய்
நாதவடி வேபரம மோனவடி வானசிவ
நாகமணி யோக நிலையே
ஞானேந்திரியம் – நாசி
வாசனை அறியவே நாசியின் வளியிலே
வடிவறியும் குணமுடைய தாய்
வாயறியும் சுவைமதி போயடையுங் காரண
வகையறியும் மணமுடையதாய்
மாசினை விலக்கியே மூச்சினைப் பழக்கியே
மனமமைதி தரவருவ தால்
மண்பரவு சுகந்தமே நுண்ணறிய வைத்திடும்
மாண்பினை வேண்டு கின்றேன்
பூசனை அறிகிலேன் போதனை பெறுகிலேன்
புனர்வாழ்வு ஏதறிகிலேன்
பூர்வத்தில் செய்தநற் கார்யத் தாலேயே
புண்ணியா உன்னை அறிவேன்
தாசனைத் தனயனைத் தயவிலுன தடியினைத்
தாங்கிடும் ஏழை இவனைத்
தக்கவனாய் தருமநெறி மிக்கவனாய் மாற்றுக
தட்சிணா மூர்த்தி குருவே!
(14)
வடிவறியும் குணமுடைய தாய்
வாயறியும் சுவைமதி போயடையுங் காரண
வகையறியும் மணமுடையதாய்
மாசினை விலக்கியே மூச்சினைப் பழக்கியே
மனமமைதி தரவருவ தால்
மண்பரவு சுகந்தமே நுண்ணறிய வைத்திடும்
மாண்பினை வேண்டு கின்றேன்
பூசனை அறிகிலேன் போதனை பெறுகிலேன்
புனர்வாழ்வு ஏதறிகிலேன்
பூர்வத்தில் செய்தநற் கார்யத் தாலேயே
புண்ணியா உன்னை அறிவேன்
தாசனைத் தனயனைத் தயவிலுன தடியினைத்
தாங்கிடும் ஏழை இவனைத்
தக்கவனாய் தருமநெறி மிக்கவனாய் மாற்றுக
தட்சிணா மூர்த்தி குருவே!
(14)
ஞானேந்திரியம் – தோல்
உடலோடு வடிவம் உருவாகும் படிவம்
உணர்வான கைங்கர் யமும்
உரசறிய அறிவிலதை முரசறியும் நெறியும்
உட்தட்ப வெப்ப நிலையும்
திடமோடு வலிவும் திறமோடு விரியும்
தெளிவான போர்வை யிதுவும்
தீர்க்கமுற நிறையும் தேக்குமர நிலையும்
திருத்திய தரத்தில் அமையும்
புடமோடு பொன்னும் பூரணசு கந்தமும்
புத்துணர் வான கலையும்
பொலியட்டும் தேகத்துள் போகட்டும் ஆனந்தம்
பூரணம் அடைய வேண்டும்
தடமோடு சிற்சபை நடமாடும் நாயகனே
தவயோக சிவஞா னனே
தக்கவனே நின்னருளே பக்கபலம் என்னுயிர்
தட்சிண மூர்த்தி குருவே!
(15)
உணர்வான கைங்கர் யமும்
உரசறிய அறிவிலதை முரசறியும் நெறியும்
உட்தட்ப வெப்ப நிலையும்
திடமோடு வலிவும் திறமோடு விரியும்
தெளிவான போர்வை யிதுவும்
தீர்க்கமுற நிறையும் தேக்குமர நிலையும்
திருத்திய தரத்தில் அமையும்
புடமோடு பொன்னும் பூரணசு கந்தமும்
புத்துணர் வான கலையும்
பொலியட்டும் தேகத்துள் போகட்டும் ஆனந்தம்
பூரணம் அடைய வேண்டும்
தடமோடு சிற்சபை நடமாடும் நாயகனே
தவயோக சிவஞா னனே
தக்கவனே நின்னருளே பக்கபலம் என்னுயிர்
தட்சிண மூர்த்தி குருவே!
(15)
ஐந்துறைவாயு – பிராணவாயு
இதயம் இருக்கும்நுரை ஈரல் இயக்கும்முறை
ஈர்க்கும் மூச்சின் அளவில்
இணையும் உயிருமுடல் பிணையும் நேருரிமை
இயலும் உயிரின் வாயு
நிதமும் உடலில்கசி நீரின் தாகம்பசி
நிறையச் சீர் அளந்த
நிலையே பிராணமய கலையே நானறிய
நிஜமே பேரறிவு தா
உதயம் ஆகியது உள்ளம் மாறியது
உயரும் நந்நிலை யிதே
உயிரின் சாசுவதம் ஓடும் சுவாசமென
உணரும் நல்லறிவு தா
பதியும் பாதிமதி முடியும் பாசுபதி
பரனே சிவமய சுதா
பயனே மெளனகுரு தயவே தாரகனே
தட்சிணா மூர்த்தியலங் காரா!
(16)
ஈர்க்கும் மூச்சின் அளவில்
இணையும் உயிருமுடல் பிணையும் நேருரிமை
இயலும் உயிரின் வாயு
நிதமும் உடலில்கசி நீரின் தாகம்பசி
நிறையச் சீர் அளந்த
நிலையே பிராணமய கலையே நானறிய
நிஜமே பேரறிவு தா
உதயம் ஆகியது உள்ளம் மாறியது
உயரும் நந்நிலை யிதே
உயிரின் சாசுவதம் ஓடும் சுவாசமென
உணரும் நல்லறிவு தா
பதியும் பாதிமதி முடியும் பாசுபதி
பரனே சிவமய சுதா
பயனே மெளனகுரு தயவே தாரகனே
தட்சிணா மூர்த்தியலங் காரா!
(16)
ஐந்துறைவாயு – அபான வாயு
சரியளவு சக்தியும் சரீர சுத்தியும்
சாற்றமுது தேற்றறி தலும்
சாதனமே ஆனதுடற் சேதனமே குறையான
சங்கடம் விலக்கு நிலையும்
கரியமில வாயுவென உயிரறியும் மூச்சினால்
கரைத்துவிட முயற்சி யிதனால்
கைங்கர்ய மாற்றுமிச் செளகர்ய மானது
கடைவாசல் காக்க வேண்டும்
பரிவுடைய தயவினால் பரசிவ னருளினால்
பழுதிலா துடல் உதவியால்
பக்குவ மடையவும் நற்குண அமைதியும்
பரிபூரண நல மருளவும்
திரியளவு மனமுதிர தெரியுமதி ஜோதியே
தீபம் ஏற்றி அருள்க
தென்னவனே நிலவனைய புன்னகையி லாசனே
தேவகுரு வான வடிவே!
(17)
சாற்றமுது தேற்றறி தலும்
சாதனமே ஆனதுடற் சேதனமே குறையான
சங்கடம் விலக்கு நிலையும்
கரியமில வாயுவென உயிரறியும் மூச்சினால்
கரைத்துவிட முயற்சி யிதனால்
கைங்கர்ய மாற்றுமிச் செளகர்ய மானது
கடைவாசல் காக்க வேண்டும்
பரிவுடைய தயவினால் பரசிவ னருளினால்
பழுதிலா துடல் உதவியால்
பக்குவ மடையவும் நற்குண அமைதியும்
பரிபூரண நல மருளவும்
திரியளவு மனமுதிர தெரியுமதி ஜோதியே
தீபம் ஏற்றி அருள்க
தென்னவனே நிலவனைய புன்னகையி லாசனே
தேவகுரு வான வடிவே!
(17)
ஐந்துறைவாயு – உதானவாயு
கண்டத்தில் நிற்குநற் காற்றுவடி வானதே
கணக்கிட்டு நாத வடிவை
கற்பிக்கும் ஆதாரம் கழுத்துக்குத் தேவாரம்
கவளத்துச் சாத முணவை
பிண்டத்தில் சேர்ப்பிக்கும் பேரறிய சாதகம்
பெயரிலே உதான வாயு
பேச்சுக்கும் மூச்சுக்கும் பேணிடும் சுகத்துக்கும்
பெருந்துணை யான மாயம்
பண்டத்தில் உடலெனும் பாவத்தில் நானெனும்
பவித்திரம் மறைத்த காயம்
பாவிக்கும் ஆணவம் மேவிக்கும் காரணம்
பனியென விலக்க வேண்டும்
அண்டத்தில் உலகெலாம் ஆக்கிய சாக்கியா
ஆனந்தத் திருத் தாண்டவா
ஆண்டவா திருவருள் வேண்டவா குருவடி
அடைக்கலம் நமச்சி வாயா!
(18)
கணக்கிட்டு நாத வடிவை
கற்பிக்கும் ஆதாரம் கழுத்துக்குத் தேவாரம்
கவளத்துச் சாத முணவை
பிண்டத்தில் சேர்ப்பிக்கும் பேரறிய சாதகம்
பெயரிலே உதான வாயு
பேச்சுக்கும் மூச்சுக்கும் பேணிடும் சுகத்துக்கும்
பெருந்துணை யான மாயம்
பண்டத்தில் உடலெனும் பாவத்தில் நானெனும்
பவித்திரம் மறைத்த காயம்
பாவிக்கும் ஆணவம் மேவிக்கும் காரணம்
பனியென விலக்க வேண்டும்
அண்டத்தில் உலகெலாம் ஆக்கிய சாக்கியா
ஆனந்தத் திருத் தாண்டவா
ஆண்டவா திருவருள் வேண்டவா குருவடி
அடைக்கலம் நமச்சி வாயா!
(18)
ஐந்துறைவாயு – ஸமானவாயு
உதரத்தில் நிறையும் உணவமுது கறையும்
உருசீ ரணமாக உதவும்
உருசத்துப் பிரியும் சரிசத்துப் பரவும்
உருவாகும் அணுவில் ஆக்கும்
அதரத்தில் சுவையும் அந்தத்தில் பசியும்
ஆக்கிஉரு வாக்கி நேயம்
ஆதார மாகவுடல் தாதாய் அமைவது
அருஞ் சமான வாயு
மதுரத்தில் பூவில் மாய்கின்ற வண்டாய்
மாயத்தில் மோகத்தில் நான்
மாளாமல் உடலெனும் கோளான சாதனம்
மண்ணுலகு பயன் படுத்த
சதுரத்தில் சதுரமாய் சரிநிகர பொருத்தமாய்
சாதித்து வாழ வேண்டும்
சனகாதி முனிவரின் கனகாதி வள்ளலே
சங்கரா சிவ சம்புவே
(19)
உருசீ ரணமாக உதவும்
உருசத்துப் பிரியும் சரிசத்துப் பரவும்
உருவாகும் அணுவில் ஆக்கும்
அதரத்தில் சுவையும் அந்தத்தில் பசியும்
ஆக்கிஉரு வாக்கி நேயம்
ஆதார மாகவுடல் தாதாய் அமைவது
அருஞ் சமான வாயு
மதுரத்தில் பூவில் மாய்கின்ற வண்டாய்
மாயத்தில் மோகத்தில் நான்
மாளாமல் உடலெனும் கோளான சாதனம்
மண்ணுலகு பயன் படுத்த
சதுரத்தில் சதுரமாய் சரிநிகர பொருத்தமாய்
சாதித்து வாழ வேண்டும்
சனகாதி முனிவரின் கனகாதி வள்ளலே
சங்கரா சிவ சம்புவே
(19)
ஐந்துறைவாயு – வியானவாயு
தொட்டநிலை பட்டசுகம் சுட்டவடு கிட்டவளி
மொத்தவுணர் வத்தனையுங் காட்டும்
தோலின்அரு காமையிருந் தாளும்உடல் ஓடும்
தோற்றமிது காற்று வடிவம்
திட்டமுடன் நட்டநடு விட்டமிது தண்டுவடம்
திரியுமிது உயிரின் உணர்வாய்
தினவிலது வ்யானமெனும் திறனும்நல மாகட்டும்
தெய்வமுன தருள்உபயந் தான்
பட்டவினை கிட்டும்விலை கெட்டநிலை ஆகாது
பரசிவனே காக்க வேண்டும்
பகலவனாய் குருபரனாய் புகலுமொழி மோனத்தில்
பக்கத்தில் சேர்க்க வேண்டும்
கட்டளையே கிட்டியது கருணைவிழி எட்டியது
காலடியை மேலமர்த்த வா
காலம்அனு கூலமெனக் காட்டுங்கரு ணாகரனே
காதலினி மேலுனது தாள்!
(20)
மொத்தவுணர் வத்தனையுங் காட்டும்
தோலின்அரு காமையிருந் தாளும்உடல் ஓடும்
தோற்றமிது காற்று வடிவம்
திட்டமுடன் நட்டநடு விட்டமிது தண்டுவடம்
திரியுமிது உயிரின் உணர்வாய்
தினவிலது வ்யானமெனும் திறனும்நல மாகட்டும்
தெய்வமுன தருள்உபயந் தான்
பட்டவினை கிட்டும்விலை கெட்டநிலை ஆகாது
பரசிவனே காக்க வேண்டும்
பகலவனாய் குருபரனாய் புகலுமொழி மோனத்தில்
பக்கத்தில் சேர்க்க வேண்டும்
கட்டளையே கிட்டியது கருணைவிழி எட்டியது
காலடியை மேலமர்த்த வா
காலம்அனு கூலமெனக் காட்டுங்கரு ணாகரனே
காதலினி மேலுனது தாள்!
(20)
அந்தகரணம் – மனம்
மனிதராய்ப் பிறக்கினும் மன்ஹிதன் எனும்படி
மற்றோர்க் கிரங்கும் குணமோ
மன்னிக்கும் மேன்மையோ கண்ணியம் அன்பெனும்
மரியாதை அறிய வில்லை
கனியெனச் சிவமயம் கைக்கெட்டும் பொழுதிலோ
காயெனவே மாய உலகே
கைவல்ய மென்றுமனம் பொய்சொல்வ தானது
கடிதளவும் பிடிக்க வில்லை
புனிதராய்ச் சிறப்பதோ போதனை பிறப்பதோ
புக்ககம் புகக் கிடைப்பதோ
போதகனே ஆதிசிவ சாதகனே நாதசம்
பூரணனே அருள வேண்டும்
தனியராய் தவத்தினாய் தண்முகச் சிரிப்பினாய்
தட்சிணா மூர்த்தி யானாய்
தானறியும் மனத்திறம் நானறியச் செய்கவே
தருமபரி பாலன் குருவே!
(21)
மற்றோர்க் கிரங்கும் குணமோ
மன்னிக்கும் மேன்மையோ கண்ணியம் அன்பெனும்
மரியாதை அறிய வில்லை
கனியெனச் சிவமயம் கைக்கெட்டும் பொழுதிலோ
காயெனவே மாய உலகே
கைவல்ய மென்றுமனம் பொய்சொல்வ தானது
கடிதளவும் பிடிக்க வில்லை
புனிதராய்ச் சிறப்பதோ போதனை பிறப்பதோ
புக்ககம் புகக் கிடைப்பதோ
போதகனே ஆதிசிவ சாதகனே நாதசம்
பூரணனே அருள வேண்டும்
தனியராய் தவத்தினாய் தண்முகச் சிரிப்பினாய்
தட்சிணா மூர்த்தி யானாய்
தானறியும் மனத்திறம் நானறியச் செய்கவே
தருமபரி பாலன் குருவே!
(21)
அந்தகரணம் – சித்தம்
சித்தமே நிறையவளர் சிந்தனை நினைவுமலர்
சீலமன சாட்சி எனவே
சீவனே மூடிஉயிர் போகையில் ஏகுமுடல்
சேரவழி காட்டி யதனால்
சத்தமே மறையமனச் சாந்தியே நிறையமதி
சந்தோஷ மாக வளர
சாட்சிமனக் கண்ணாடி காட்சியினி தாகவே
சத்தியம் அருள வேண்டும்
நித்தமே நல்லநெறி நேர்மை எண்ணவழி
நினைவெலாம் உந்தண் முகம்
நிலவட்டும் சிந்தனை நிறையட்டும் ஆனந்தம்
நீடித் திருக்க வேண்டும்
தத்தமே நின்னடிமை தண்டமே சமர்ப்பணம்
தாரணியின் ஆதி குருவே
தருமபரி பாலகனே ஹரசிவசு தாகரனே
தட்சிணா மூர்த்தி அருளே!
(22)
சீலமன சாட்சி எனவே
சீவனே மூடிஉயிர் போகையில் ஏகுமுடல்
சேரவழி காட்டி யதனால்
சத்தமே மறையமனச் சாந்தியே நிறையமதி
சந்தோஷ மாக வளர
சாட்சிமனக் கண்ணாடி காட்சியினி தாகவே
சத்தியம் அருள வேண்டும்
நித்தமே நல்லநெறி நேர்மை எண்ணவழி
நினைவெலாம் உந்தண் முகம்
நிலவட்டும் சிந்தனை நிறையட்டும் ஆனந்தம்
நீடித் திருக்க வேண்டும்
தத்தமே நின்னடிமை தண்டமே சமர்ப்பணம்
தாரணியின் ஆதி குருவே
தருமபரி பாலகனே ஹரசிவசு தாகரனே
தட்சிணா மூர்த்தி அருளே!
(22)
அந்தகரணம் – புத்தி
எண்ணும் எழுத்தும் ஏட்டுக் கல்வியும்
எத்துணை படித்த போதும்
எதிர்காலம் ஏதென்று தெரியாத வேதனை
ஏனிந்த மதி வாதனை
பண்ணும் பரதமும் பலகலை அறிவியல்
பாடம் படித்தும் என்ன
பதவியும் பட்டமும் உதவுமோ நமனுடை
பரீட்சை விதித்த நாளே
விண்ணும் விளைபயிர் வித்தும் முளையணு
விதமும் உயிரும் பலவும்
விஞ்ஞான மென்பதும் மெஞ்ஞான மிழப்பதும்
விவேகம் என்றாகு மோ?
கண்ணும் காணாதநிலை கடவுள்நான் நானெனக்
கற்பதே புத்தி அழகு
கடவுளுன தருளுபயம் திடமெனது சத்தியம்
கல்லால் அமர்ந்த தேவே!
(23)
எத்துணை படித்த போதும்
எதிர்காலம் ஏதென்று தெரியாத வேதனை
ஏனிந்த மதி வாதனை
பண்ணும் பரதமும் பலகலை அறிவியல்
பாடம் படித்தும் என்ன
பதவியும் பட்டமும் உதவுமோ நமனுடை
பரீட்சை விதித்த நாளே
விண்ணும் விளைபயிர் வித்தும் முளையணு
விதமும் உயிரும் பலவும்
விஞ்ஞான மென்பதும் மெஞ்ஞான மிழப்பதும்
விவேகம் என்றாகு மோ?
கண்ணும் காணாதநிலை கடவுள்நான் நானெனக்
கற்பதே புத்தி அழகு
கடவுளுன தருளுபயம் திடமெனது சத்தியம்
கல்லால் அமர்ந்த தேவே!
(23)
அந்தகரணம் – அகங்காரம்
நான் நானெனும் வீண் ஆணவம்
தான் தன்னுள் காணும்
நன வானது கன வாயினும்
நிஜமா மெனு மாயம்
ஊனா னதும் உடலா னதும்
உண்மை எனும் பாரம்
உணர்வோ மதி உணரா தது
உதிரும் அகங் காரம்
நான் யார்அது நீயே யெனும்
ஞானம் வர வேண்டும்
நம னாயுதம் வரும் நாளிலும்
சிவநாமந் துணை யாகும்
வான் மாலனும் மண் நான்முகன்
காணா தணா மலையே
வடிவே குரு பரனே அருள்
வாடா மலர் முகனே!
(24)
தான் தன்னுள் காணும்
நன வானது கன வாயினும்
நிஜமா மெனு மாயம்
ஊனா னதும் உடலா னதும்
உண்மை எனும் பாரம்
உணர்வோ மதி உணரா தது
உதிரும் அகங் காரம்
நான் யார்அது நீயே யெனும்
ஞானம் வர வேண்டும்
நம னாயுதம் வரும் நாளிலும்
சிவநாமந் துணை யாகும்
வான் மாலனும் மண் நான்முகன்
காணா தணா மலையே
வடிவே குரு பரனே அருள்
வாடா மலர் முகனே!
(24)
Pages: 1 2


























