அம்மாவுக்குப் பதினாறு (அமரத்துவம் அடைந்த அன்னைக்குப் பதினாறு பிண்டங்கள்) – (மாத்ரு ஷோடஸி ஸ்லோகம்) கருவிலென் பளுவது வீங்கிக் கால்தடு மாறிடத் தாங்கி அருநடை மேடுகள் பள்ளம் ஆவன யாவையும் தாண்டி பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன் படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (1) ஒருவொரு மாதமு மாக உதரமுட் பாரமு மாக கருவொரு காலமு மாக கனமுமுத் தாரமு மாக பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன் படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (2) கருவினில் இட்டாய்! எந்தன் காலுதை பட்டாய் பட்டும் முறுவலில் விட்டாய்! உந்தன்
துன்முகி – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016 துன்முகியாய் புன்னகைப்பூ முன்னுதிர வருடும் துள்ளிவருங் காலமகற் கள்ளிவரும் வருடம்! எண்முடியாக் காலமதை எண்ணிடவா முடியும்! எதுபடியும்? அறுபதரும் பொருளதுவாய் விடியும்! ஓடுவதால் காலமகள் ஓர்நதியோ என்றால் உருவாகும் மலைமுடியும் கடலுந்தான் எங்கே! ஓர்திக்கால் போகுமொரு கூரம்போ என்றால் உருவியதை ஏவிடுவான் ஒருவனுந்தான் எங்கே! காலமொரு கண்ணாடி போலதுவே என்றால் கனிமுகமும் பிள்ளையிள முதுமையென மாற்றி கோலமெனச் சூழுலகச் சீலமதைக் காட்டும் கோடறிவான் வேடந்தரு நாடகத்தான் எங்கே! கோர்த்திழுக்கும் ஊழ்க்கயிறு போலதுவே என்றால் கொடுமுடிச்சை இழுத்தமிழக் கொடுத்தவரும் யாரே! ஈர்த்திழுக்கும் போதெல்லாம் இங்கிருக்குங் காலம் இலாமலெதிர் பார்த்திளைக்க இருத்தியரும் யாரே!
Response to Rishi…
Life is what? A Quest, to start;……
ஆண்மை Read at ELAB ஆளுமையே ஆண்மை அன்புடனே உறவாடிப் பேணுமையே பெண்மை எனக்கொண்டால் – சூழுலகில் பெண்மை ஆண்களுக்கும் பேராண்மை பெண்களுக்கும் மென்மை போர்த்திருக்கும் மெய் உமையாள் தலைவன் உமைஆள் சிவனாய் அமைவான் ஆள்உமை அதுவே – இமையாய் ஆணோடு பெண்ணே அனுசரித் தினித்திருக்க நாணோடு இழைத்த வீணை மாரைநிமிர்த்தி மயிர்க்கூரை இதழ் பரத்தி ஊரையடக்கும் உயர்வீரம் – கூரையிட்டு குலத்தின் நலங்காக்க குனிந்துழைக்கும் செயல்பாடும் நிலத்தில் ஆண்மையிது நிஜம் ஈராக் எதிரும் புதிரும் பதியும் பகையும் விதியில் விதைத்து உயிரில் உதைத்து சதியில் சறுக்கி மதியில் சுருக்கி உதிரம் உதிரும் வதனம் விசனம் பொதுவில் புவனம்
Maha Kavi Kalidasa – Sample Treatise
SOLITARY REAPER – An inspired tamil version
Changing World Read at London Black History Month Celebrations, October 2005 An unusual dawn of a routine Monday, Ordained life for a working week just kick started the run, Life’s sojourn almost as straight as the railways – “No change”, you say. In your creed, Working life is preset; Patterns defaulted; A hastened shower, Cursory nibble at headline news, As you prepare, Force and resistance in full display at the
(Read in ENGLISH) கறை படிந்த கடல் Presented during the Tsunami Victim Support Meeting, in London தாலாட்டிக் கால்மாட்டில் தலைகவிழ்த்து அலை செதுக்கி காலிடுக்கில் நூலிழைத்து கைநழுவிப் போகின்றாய்! மெத்தென்று உன்மடியின் மேல்தவழும் படகுகளை மெதுவாக அசைக்கின்றாய்! மேலெல்லாம் நுரைக்கின்றாய்! சலசலனெ உன்சத்தம் சங்கீதம்! வெண்மணலின் துலவுகின்ற என்கையைத் தொட்டு நனைக்கின்றாய்! கடலழகே நீகாந்தம்! கண்டதனால் உன்னருகில் தடமறிந்து நாங்கள் தங்கி இருக்கின்றோம். என்றாலும் உன் காற்று – இதமில்லை இன்று! மன்றாடும் என் உள்ளம் – மறக்காது ஒன்று. ஆர்ப்பரித்து நீசெய்த அமர்க்களத்தை என்னசொல்ல! பூப்பறித்துக் கசக்கியதாய் பூமியிலே எம்மைந்தர்! ஆப்பிழந்த தேராய்
(Read in TAMIL) Rise above the shore Presented during the Tsunami Victim Support Meeting, in London Your lullaby sweet, The gentle tides Chiselled all sides, Washing, whirling My toes cold tread As tickling with a thread, Shrilling your slipping waves Rock the sleeping boats, In rhythm, no mayhem! Splash of flowers foam Glow in the flow, Its tingle, a sweet melody! In the white sands My fingers cross For the