Sivapuranam by Manickavasagar (91-95)

91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 92. சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 93. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 94. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 95. பல்லோரும் ஏத்தப் பணிந்து. ‘ஓ, துன்பங்களை அறுப்பவனே’ என்றெல்லாம் சொற்களால் சொல்லி விளக்க முடியாதவனை (சொல்லற்கு அரியானை), சொல்லினால் சுட்டிக் காட்டி (சொல்லி),  இறைவனின் திருவடிகளில் பணிந்து (திருவடிக் கீழ்), இங்கே சொல்லிய  சிவபுராணம் எனும் திருவாசகப் பாடலின் பொருளை (சொல்லிய பாட்டின் பொருளை), ஏற்ற வகையில் சரியாக உணர்ந்து  (உணர்ந்து) சொல்லுகின்ற மெய்யடியார்கள் (சொல்லுவார்), உண்மையின் (சிவபுரத்தின்)  மையத்தில் எப்பொழுதும் உள்ளவரான (உள்ளார்)

Read More

Sivapuranam by Manickavasagar (90)

90. தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே சிதம்பரம் எனும் தில்லை மன்றத்தில் (தில்லையுள்) திருவிளையாடலுக்காக நடனம் ஆடுபவனே (கூத்தனே), தென் திசையில் பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலத்தில் அருள்பவனே (தென்பாண்டி நாட்டானே). ‘தில்லையில் கூத்தனே’ எனச் சொல்லாமால், ‘தில்லை உள் கூத்தனே’ எனச் சொல்லியிருப்பது, சிவபிரான், தில்லையாகிய சிற்றம்பலத்தின் உள்ளே, நடனமாடுகிறார் என்பதாகும். உள்ளே இருப்பது, மறைக்கப்படுவது ஆகும். இதையே, ‘சிதம்பர ரகசியம்’ எனத் தில்லை ஆலயத்தில் காட்டியிருக்கிறார்கள். ‘ஆண்டவன் தாண்டவன் ஆடிய தில்லை – அதற்கிணை உலகிலோர் தலமுமே தில்லை’ என எனது தந்தை திருவருட் கவிஞர் மீனாக்ஷிசுந்தரனார் பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

Read More

Sivapuranam by Manickavasagar (89)

89. நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே >பிறவிக்கட்டை அழிக்க வல்ல சிவபிரான், இருளின் மத்தியில் (நள்ளிருளில்), மாற்றங்களாகிய நடனத்தை (நட்டம்) உறுதியுடன் (பயின்று) ஆடி வரும் தலைவன் (ஆடும் நாதனே). நள்ளிருளில் இறைவன் ஆடுவது ஏன்? நள்ளிருள் என்பது உலகங்களாகிய தோற்ற மாயை எதுவும் இல்லாப் பூரண நிலை. எல்லா உலகங்களும் அடங்கிய போது, அங்கே இருக்கின்ற நள்ளிருள். அது நல்லிருள். அதுவே பூரணத்தின் கீழிருக்கும் ‘சுத்தமாயை’ எனும் போர்வை. அதுவே ‘சிதாகாசம்’ அல்லது சிற்றம்பலம் எனும் மேடை. எல்லா உலகங்களும் அடங்கிய அந்த நள்ளிருளிலும் நிலையாக இருப்பது, எப்போதும் இருப்பதான பரம்பொருள் ஒன்றே. அசையாப் பொருளான,

Read More

Sivapuranam by Manickavasagar (84-88)

84. வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப 85. ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 86. போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் தந்நிலை அறியும் இறையுணர்வு, உள்ளே வெள்ளமாய் சுகம் தந்து கொண்டிருக்கையில்,  வேறுபாடுகளையும் மாற்றங்களையும் (வேற்று விகார) கொள்வதான,  நஞ்சாகிய உடலினுள் கிடந்து (விடக்குடம்பின் உள் கிடப்ப), யான் தவித்திட வேண்டுமோ?   முடியாது  (ஆற்றேன்). மாணிக்கவாசகர் காட்டும் இந்நிலை, வைராக்கியம் எனும் பற்றின்மையில் முற்றியநிலை. முதலில் உலகப் பொருட்களில், உலக விவாகரங்களில் பற்றின்மையை வளர்த்து வந்த பெரியோர்கள்,  இறையுணர்வினைப் பெற்ற கணமே,   இதுவரை கருவிகளாக உதவிய தமது உடல், புலன், மனம், புத்தி

Read More

Sivapuranam by Manickavasagar (79-83)

79. ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற சிவானந்தலஹரீ எனும் பரசிவசுகப்பெருவெள்ளமே (ஆற்றின்ப வெள்ளமே)!  எனை ஈன்ற தந்தையே (அத்தா)! கழிக்க முடியாத பொருளாக இறுதியற்ற நிலையே (மிக்காய் நின்ற)! ஆத்மவிசாரம் எனத் தன்னுளே கடவுளைத் தேடும் இனிய தவத்தினாலும், அப்பயனால் தனையுணரும் சுகமும், சிந்தையெல்லாம் சிவமாய்ப்  பரவ,  அறிவு, மனம், உடல் என எங்கும் ஆனந்த வெள்ளம், மெய்யடியாரை ஆட்கொள்கிறது. அத்தகைய ஆனந்தத்தில்,  மாணிக்கவாசகர் இசைத்த மாபெரும் உண்மையே சிவபுராணம் எனும் இந்நந்நூல். ‘மிக்காய் நின்ற’ என்பதற்குத் தள்ளிவிட முடியாத தத்துவம் எனப் பொருள். உபநிடதங்கள், ஆத்ம விசாரணை எனும் தவத்திற்கு ஏற்ற ஒரு வழியாகக் காட்டுவது,

Read More

Sivapuranam by Manickavasagar (72-78)

72. சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே தீராத ஒளியானவனே (சோதியனே),  சேருகின்ற இருளானவனே (துன்னிருளே),  தோற்றம் இல்லாப் புகழுடையவனே (தோன்றாப் பெருமையனே) துன்னிருள் என்றால் வந்து சேருகின்ற இருள் என்பது பொருள். எங்கிருந்து இருள் வருகின்றது?   எங்கெல்லாம் ஒளி இல்லையோ, அங்கெல்லாம், இருள் சூழ்கிறது.  இருள் என்பது மறைத்தல் எனும் இறைவனின் ஐந்தொழிலில் ஒன்று.  அது ஜீவனின் நிலையில், ஜீவனுடைய அறியாமை எனும் மயக்கத்துக்கு ஒப்பு.  அது உலகத்தின் நிலையில்,  ‘மாயை’ எனும் தோற்றப் போர்வைக்கு ஒப்பு. வேதாந்த அறிவின் படி, எல்லா உலகங்களும், மாயையினாலேயே மூடப்பட்டிருக்கின்றன.   ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்னும் வேத வாக்கியத்தின் பொருள், எல்லா

Read More

Sivapuranam by Manickavasagar (67-71)

67. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே தெவிட்டாத  அமுதமே (ஆரா அமுதே), அளவிடமுடியாத பெருமானே (அளவிலாப் பெம்மானே) 68. ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே >நின்னைச் சிந்தனை செய்யாதோர் (ஓராதார்) சிந்தனைக்குள்ளூம் (உள்ளத்து) ஒளிந்திருந்து (ஒளிக்கும்) ஒளிர்ந்திருப்பவனே (ஒளியானே) 69. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே உன்னை நினைந்திருக்கும் எனக்குள்ளே, என் கல்லான மனதையும் நீராகத் தெளிய வைத்து (நீராய் உருக்கி), என் உயிருக்கு உயிராய் நிற்பவனே (என் ஆருயிராய் நின்றானே) இறைச்சிந்தனை செய்ய வேண்டும் என்ற எண்ணமோ, முயற்சியோ இல்லாமல், உலக வழக்கில் மட்டுமே ஈடுபட்டிருப்போரின்  நிலை என்ன? அவர்களும் கடவுளின் குழந்தைகள்தான். ஆனால், அவர்களின்

Read More

Sivapuranam by Manickavasagar (57-66)

57. கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் அன்பு கலந்து அறிவினால் (கலந்து அன்பாகி) உன்பால் எப்போதும் உள்ளம் உருகும் (கசிந்து உள் உருகும்) 58. நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நற்பண்பு சிறிதும் இல்லாத (நலம் தான் இலாத) தாழ்மையானவான எனக்கு (சிறியேற்கு), கருணைகாட்டி (நல்கி) இறைவன் தமக்கு எத்தகைய அருள்  செய்தார் என அடுத்த வரிகளில் காட்டுகின்றார் மாணிக்க வாசகர். ‘கலந்த அன்பாகி’ என்றதால், அன்புடன் கலந்த அறிவு குறிக்கப்பட்டது. அந்த அறிவு இறைவனை எண்ணி உருகி இருக்கும் நல்லறிவு.  அவ்வறிவினை உடையவரே நலம் அடைபவர்.  அத்தகைய நலம் தனக்குப் போதுமான அளவுக்கு இல்லையோ

Read More

Sivapuranam by Manickavasagar (49-56)

49. நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த விடுதலை தரவல்ல அப்பரமாத்மா எப்படிப் பட்டவன்?  ஐந்து வண்ணங்களுடன் (நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்), வானவர்கள் போற்ற (விண்ணோர்கள் ஏத்த) விளங்குபவன் இறைவன். நிறங்கள் எனும் சொற்பயன், ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்ட உதவுதலே. ஒன்றேயான பரம்பொருளே, தனது சக்தியால் பல்லுலகமாயும்,  உயிர்களாயும் தோன்றுகின்றது.  இப்படி வேறுபட்ட தோற்றங்களுக்கு, இறைவனின் திருவிளையாடலாக, பரம்பொருளுக்கு ஐந்து தொழில்கள் இருப்பதாக மறைகள் காட்டுகின்றன. அவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பன. மேலும் பரம்பொருளே, சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா என விரிவதாக, சைவ சித்தாந்தமும் காட்டும்.

Read More

Sivapuranam by Manickavasagar (44-48)

44. நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே  நின்னருளால், இறை உணர்வாகிய பேற்றினைப் பெற்றதால், நல்ல மணமுடன் (நாற்றத்தின்) புலனறிவு இருக்கவும் (நேரியாய்),   தொலைவிலும் (சேயாய்), அருகிலுமாய் இருப்பனே (நணியானே), 45. மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே மாற்றங்களால் பாதிப்படுகின்ற எல்லாவற்றையும், மனதினையும் கடந்து (மாற்றம் மனம் கழிய), மறைபொருளாக நிலைத்திருக்கும் இறைவனே (நின்ற மறையோனே). இரண்டு முக்கியமான சம்ஸ்கிருதச் சொற்கள் – ‘ஸம்ஸ்காரம்’, ‘ஸம்ஸாரம்’ என்பன. நாம் ஆசையினால் செய்கின்ற எல்லாச் செயலும், அதன் விளைவினால் நம்மைப் பாதிக்கும். அது சுகமாகவும் இருக்கலாம். துக்கமாகவும் இருக்கலாம். அவற்றால் விளியும் பாதிப்புக்கள் உடனேயோ, அல்லது வேறொரு காலத்திலோ, வேறொரு

Read More