ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் துதி


குருவே துணை

உருகிடு மனமே!
உணர்ந்தனு தினமே!
குருவடி துணையெனக்
கொள்! – அக்கணமே

நலமே கிடுமே
மனமே எனவே
உருகிடு – உருகிடு ( உருகிடு)

எதற்கினித் துயரம்!
எதிரினில் அபயம்!
நமக்கினி அருளும்
நமசிவ வடிவம்!
வரமே கிடுமே
மனமே யினிமேல்
உருகிடு – உருகிடு (உருகிடு)
திடுமென இறப்பு!
மறுபடி பிறப்பு!
திருவருட் குருவின்
திருவடி சிறப்பு!

நமபயம் எதற்கு!
நமக்கெது இழப்பு!
பரசிவம் அருளும்
பரிவொளி விளக்கு!

சுகம் ஏவிடுமே!
சுடரே கிடவே
உருகிடு …. உருகிடு (உருகிடு)

மீ. ரா
(24.3.2002)

Urigidu Maname

Related Posts

Share this Post