மாண்டுக்ய உபநிடதம், ஜீவனின் அனுபவ உலகங்களை முறையே ‘விஸ்வா’ (விழிப்புலகம்), ‘தைஜஸா’ (கனவுலகம்), மற்றும், ‘ப்ரக்ஞா’ (காரண அறிவுலகம்) என்று அழைக்கின்றது. மூன்று அனுபவ நிலைகளை முறையே ‘விரட்’ (பூத உலகம்), ‘ஹிரண்ய கர்ப்பம் ’ (நுண்ணிய கருவுலகம்), மற்றும், ‘ஈஷ்வர மாயா’ அல்லது ‘மாயை’ (மாயாவுலகம்) என்று அழைக்கின்றது
Tag Archives: hide-menu
- January 1, 2012
- Manisha Panchakam
இந்த முதல் ஸ்லோகம் ஜீவனைப் பற்றிய ஆய்வினை முதல் வரியிலே காட்டுகின்றது. ஜீவனை ஆய்வதற்கு, மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களையே பொருளாக எடுத்துக் காட்டுகிறது. எல்லா மனித உயிர்களும் தினமும் மாறி மாறி அனுபவிக்கும் மூன்று நிலைகளை உபநிடதங்கள் ‘அவஸ்தா’ என்று குறிக்கின்றது.
- January 1, 2012
- Manisha Panchakam
‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள். அவ்விதஅறிவு, வெறும் நம்பிக்கையினாலோ, ஏதேனும் கொள்கைப் பிடிப்பினாலோ, அல்லது உணர்ச்சி நிர்ப்பந்தங்களுக்காகவோ ஏற்றுக் கொண்ட முடிவு அல்ல.