Sivapuranam by Manickavasagar (84-88)

84. வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப 85. ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 86. போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் தந்நிலை அறியும் இறையுணர்வு, உள்ளே வெள்ளமாய் சுகம் தந்து கொண்டிருக்கையில்,  வேறுபாடுகளையும் மாற்றங்களையும் (வேற்று விகார) கொள்வதான,  நஞ்சாகிய உடலினுள் கிடந்து (விடக்குடம்பின் உள் கிடப்ப), யான் தவித்திட வேண்டுமோ?   முடியாது  (ஆற்றேன்). மாணிக்கவாசகர் காட்டும் இந்நிலை, வைராக்கியம் எனும் பற்றின்மையில் முற்றியநிலை. முதலில் உலகப் பொருட்களில், உலக விவாகரங்களில் பற்றின்மையை வளர்த்து வந்த பெரியோர்கள்,  இறையுணர்வினைப் பெற்ற கணமே,   இதுவரை கருவிகளாக உதவிய தமது உடல், புலன், மனம், புத்தி

Read More